இந்தியா: 4 மாதங்களில் 5 லட்சம் பேர் வேலையிழப்பு!
Subscribe to Oneindia Tamil

இந்தியப் பொருளாதாரத்தின் பின்னடைவு குறித்த விவாதத்தின் போது அளித்த எழுத்து மூல பதிலில் இப்படித் தெரிவித்துள்ளார் இந்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் பிரேம்சந்த் குப்தா.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:
தொழிலாளர் நலத்துறை அமைச்சக கணக்கெடுப்பின்படி கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக 5 லட்சம் போர் வேலை இழந்துள்ளனர். பிபிஓ மட்டுமின்றி அனைத்து துறைகளிலுமே இந்த வேலையிழப்புகள் தொடர்கின்றன.
இந்த ஆண்டும் வேலையிழப்புகள் தொடர்ந்தாலும், அதன் வேகத்தைக் குறைக்க மத்திய அரசு பணவியல் நடவடிக்கைகளையும், கூடுதல் நிதிச் சலுகைகளையும் வழங்கி வருகிறது. 3வது கட்ட நிதிச் சலுகைகளை விரைவில் அறிவிக்க உள்ளது, என்று தன் எழுத்துப்பூர்வ பதிலில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications