நடந்தது 'விமான தற்கொலைத் தாக்குதல்'-புலிகள்

இது தொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் (புலிகளின் தற்கொலைப் படையினர்) வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இதனால் இந்தத் தளங்கள் மீது புலிகளின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. விமானப் படைத் தளத்தில் மீது எங்களது விமானங்களைப் பாயச் செய்து தாக்குதல் நடத்தினோம்.
இந்தத் தாக்குதலை வெற்றிகரமான நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான கர்னல் ரூபன், லெப்டினென்ட் கர்னல் சிரித்திரன் ஆகியோர்களின் திறமையான வீரச் செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 'நீலப்புலிகள்' என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் அனைத்துப் பகுதிகளும் பிடிபட்டுவிட்டன, விமானங்களை அவர்களே எரித்துவிட்டனர்... இதோ புகைப்படங்கள், அவர்களது ரன்வேக்களையும் பிடித்துவிட்டோம் என்று தினமும் ஒரு கோயபல்ஸ் ரக தகவல்களை தந்து வரும் இலங்கை பாதுகாப்புத்துறையையும் மேலும் பல நாடுகளையும் புலிகளின் இந்த விமானத் தாக்குதல் பெரும் அதி்ர்ச்சியைத் தந்துள்ளது.
இவர்களது எங்கிருந்து இந்த விமானங்களை இயக்குகின்றனர், எங்கு இவற்றை மறைத்த வைக்கின்றனர், புலிகள் எப்படி விமானப் படை பயிற்சி பெற்றனர் என்பது இன்னும் பெரும் ரகசியமாகவே உள்ளது.
புலிகளின் இந்தத் தாக்குதலைப் பார்த்தால் எதி்ர்வரும் காலங்களில் இலங்கை ராணுவத்துக்கு மேலும் அதிர்ச்சிகள் காத்திருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications