வக்கீல்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் - நாளை கறுப்பு கொடி கண்டன போராட்டம்
சென்னை: சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை கறுப்பு கொடி கண்டன போராட்டம் நடத்தப்படும் என மதிமுக செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள் மீது நடத்திய அடக்குமுறையைக் கண்டித்து நாளை காலை 10 மணி அளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் - வட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் - வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்துகிறது.
வழக்கறிஞர்கள் மீது தாக்குதலை நடத்த வேண்டும் என்று பல நாள்களாகவே திட்டமிட்டு வந்துள்ளனர். குறிப்பிட்ட 19-ஆம் தேதி அன்று இந்தத் தாக்குதலை நடத்த வேண்டுமென்று திட்டமிட்டதால் கறுப்புப் பேண்ட்டும், வெள்ளைச் சட்டையும் போட்ட வன்முறைக் கும்பலை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சாக்கு மூட்டையில் கற்களைக் கொண்டு வந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் இந்தக் கற்கள் கிடையாது. காவல்துறையின் தலைமை ஆணையர் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தால் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
பொதுச் சொத்துக்களை நாசம் செய்தால் அதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்; வழக்கு போடலாம். ஆனால், கண்டவுடன் துப்பாக்கியால் சுடுவோம் என்று காவல்துறை ஆணையர் கூறுவது சர்வாதிகாரம் ஆகும்.
வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினர், உயர் அதிகாரிகள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். உண்மையை அறிவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வழக்கறிஞர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாளை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்துகின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தொண்டர்களும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் கருப்புக் கொடியுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் வைகோ.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications