For Daily Alerts
Just In
ரூ.5,000 கோடி கேட்கும் ஏர் இந்தியா
ஏர் இந்தியா நிறுவனம் உள்ளூர் விமான சேவை நிறுவனமான இந்தியனை (இந்தியன் எர்லைன்ஸ்) தன்னுடன் இணைத்துக் கொண்ட பிறகு இந்திய தேசிய விமான நிறுவனம் லிமிடட் (என்ஏசிஐஎல்) என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்போது ஏர் இந்தியா நிறுவனத்துக்காக புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது என்ஏசிஐஎல். இதற்கு ரூ.5000 கோடி வரை தேவைப்படும் என்றும் இந்த பெரும் தொகையை பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெற்றுக்க கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் என்ஏசிஐஎல் தெரிவித்துள்ளது. சில வெளிநாட்டு வங்கிகளிடமும் இதற்கு கடன் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதத்துக்குள் புதிய விமானங்களில் சில இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றவை ஆண்டு இறுதிக்குள் வந்துவிடுமாம்.
Comments
Story first published: Monday, February 23, 2009, 11:42 [IST]