பாகி்ஸ்தானி்ல் கடத்தப்பட்ட ஐநா அதிகாரி கொலை?
குவெட்டா: சமீபத்தில் கடத்தி செல்லப்பட்ட ஐநா அகதிகள் அமைப்பு அதிகாரி ஜான் சோலக்கியை கொலை செய்துவிட்டதாக மர்ம தொலைபேசி தகவல் ஒன்று வந்துள்ளது. ஆனால் அவர் உயிருடன் இருப்பதாக் கடத்தி சென்ற தீவிரவாதி அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவாட்டாவில் இருந்த ஐநா தூதரக அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தவர் ஜான் சோலக்கி. கடந்த 2ம் தேதி தனது காரில் அலுவலகம் சென்று கொண்டிருந்து போது, தீவிரவாதிகள் இவரது காரை வழிமறித்தனர். டிரைவரை கொன்றுவிட்டு அவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
இச்சம்பவத்துக்கு பலுசிஸ்தான் ஐக்கிய விடுதலை அமைப்பு பொறுப்பேற்று கொள்வதாக தெரிவித்தது.
இந்நிலையில் குவட்டா பத்திரிகையாளர்கள் கிளப்பிற்கு போன் செய்த மர்ம ஆசாமி ஒருவர் தாங்கள் சோலக்கியை கொலை செய்துவிட்டதாகவும், அவரது உடல் இன்னும் இரண்டு மணி நேரத்தில் எதாவது ஒரு இடத்தில் கிடக்கும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த எக்ஸ்பிரஸ் நியூஸ் என்ற டிவி ஒளிபரப்பிய செய்தியில், போன் செய்த மர்ம நபர் குவட்டாவுக்கு தென்மேற்கே 100 கி.மீ., தொலைவில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள நுஸ்கி என்ற நகரில் இருந்து பேசியுள்ளார் என்கிறது.
உயிரோடு இருக்கிறார்
இந்நிலையில் பலுசிஸ்தான் ஐக்கிய விடுதலை அமைப்பின் செய்திதொடர்பாளர் கூறுகையில், சோலக்கி கொலை செய்யப்படவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். அவருக்கு இதய மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளது. ஐநா அமைப்பு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வதந்தி உண்மையாகிவிடும் என்றார்












Click it and Unblock the Notifications