இன்று ஜெ.வுக்கு 61வது பிறந்தநாள்-சிறப்பு பூஜைகள்
ஜெயலலிதாவுக்கு தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா பூங்கொத்தும், வாழ்த்து செய்தியும் அனுப்பி வைத்தார்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என ஜெயலலிதா அறிவித்த நிலையில் அவரது தொண்டர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அம்மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் சார்பில் ரேணுகாம்பாள் கோவிலில் பூஜைக்கும் அன்னதானத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதே போல பல மாவட்டங்களிலும் முக்கிய கோவில்களில் அதிமுகவினர் சிறப்புப் பூஜைகள் நடத்தினர். பல இடங்களில் அன்னதானமும் நடைபெற்றது.
மேலும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தோழமை கட்சித் தலைவர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் என். வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கும் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங், பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன், துக்ளக் ஆசிரியர் சோ ஆகியோரும் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.