நீதிமன்ற சேதம்-ஆராய நீதிபதி தலைமையில் கமிட்டி
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஞானப்பிரகாசம் தலைமையில் தமிழக அரசு கமிட்டியை அமைத்துள்ளது.
கடந்த 19ம் தேதி நடந்த இந்த மோதலில் ஏராளமான வழக்கறிஞர்களும் போலீசாரும் காயமடைந்தனர். நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீஸ் நிலையம் எரிக்கப்பட்டது. வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் தீயில் எரிந்து போயின.
மேலும் போலீசார் அடித்து நொறுக்கியதி்ல் ஏராளமான கார்கள், பைக்குகள் உடைந்து சேதமடைந்தன.
20ம் தேதி நீதிமன்றத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு துறைக்கு சொந்தமான ஜீப் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந் நிலையில், இந்த சேதங்கள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி கே.ஞானப்பிரகாசம் தலைமையில் தமிழக அரசு ஒரு கமிட்டியை நியமித்துள்ளது.
இந்தக் கமிட்டியில், ஓய்வுபெற்ற ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி பி.ராஜேந்திரன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (கட்டிடங்கள்) ஆகியோரும் இடம் பெறுவர்.
இரண்டு நாள் நடந்த மோதல் சம்பவத்தில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இந்த கமிட்டி மதிப்பீடு செய்யும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை, இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளையும் இந்தக் கமிட்டி அரசிடம் வழங்கும்.
கமிட்டி கூடிய ஒரு மாதத்திற்குள் தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!











Click it and Unblock the Notifications