டெல்லி: புலிகள் மீது தடையை நீக்க கோரும் சரத்

Subscribe to Oneindia Tamil

Sharath kumar
டெல்லி: விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய, இலங்கை அரசுகள் நீக்க வேண்டும். அப்போது தான அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்ற சூழ்நிலை உருவாகும் என அகில இந்திய மக்கள் சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சரத்குமார் தலைமையில் இன்று டெல்லியில் ஈழத்தமிழர்களை காக்க போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதில் பங்கேற்க சரத்குமார் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் டெல்லி வந்துள்ளனர். அங்கு செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில்,

ஈழப்போரினால் ஏற்பட்ட பாதிப்புகளால் 8 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் தங்களது சொந்த இடத்தை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் ஈழத்துக்கு திரும்ப இந்திய அரசு உதவ வேண்டும். அப்போது தான் இலங்கையில் தமிழர்கள் பலம் அதிகரிக்கும்.

இலங்கையில் பாதுகாப்பான பகுதியில் தமிழர்கள் பாதுகாப்பில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். மருத்துவமனைகள் மீதும் இலங்கை ராணுவம் கருணையின்றி குண்டுகளை வீசி வருகிறது. இதன்மூலம் ஈழப் பிரச்சினையில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை அரசுக்கு ஆர்வமில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மத்திய அரசு உடனடியாக் மேற்கொள்ள வேண்டும். சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் அனைவரும் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஆதரவு தருவார்கள்.

விடுதலைபுலிகள் மீதான தடையை இந்திய, இலங்கை அரசுகள் நீக்க வேண்டும். அப்போது தான அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்ற சூழ்நிலை உருவாகும். அடுத்து நடக்கும் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை நடத்த தமிழகத்தில் இருந்து தனி குழு அமைக்கப்பட்டு அங்கு அனுப்பப்பட வேண்டும் என்றார் சரத்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+