நீதிமன்ற கலவரம்: நீதி விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், உயர்நீதிமன்றத்திற்குள் போலீஸார் நுழைய உத்தரவிட்டது யார் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அது கேட்டிருந்தது.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல்கள், வன்முறையில் இறங்கியதால்தான் போலீஸார் தடியடி நடத்த நேரிட்டதாக தமிழக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான நீதி விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
இதுதவிர இணை ஆணையர்கள் சந்தீப் சிங் ரத்தோர், ராமசுப்ரமணி, துணை ஆணையர்கள் சின்ஹா, பன்னீர்செல்வம், சாரங்கன் ஆகியோரை உடனடியாக சென்னையை விட்டு வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை? அவசர முறையீட்டில் ஐகோர்ட் தலைமை நீதிபதி கேட்ட கேள்வி! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications