மாவட்டந்தோறும் உண்ணாவிரதம்-பேரணி: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கையில் தமிழினப் படுகொலையை கண்டித்து மாவட்டந்தோறும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மையில் இலங்கையில் தமிழினப் படுகொலையை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில், எனது தலைமையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு மாபெரும் கண்டன பேரணியை நாம் நடத்தினோம்.

அதேபோன்று நம்முடைய மனிதாபிமான உணர்வையும், தமிழ் உணர்வையும் காட்டும் வகையில் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மாவட்டந்தோறும் மக்களை திரட்டி கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்கள் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறு ஏற்படாத வகையில் போராட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்டச் செயலாளர்கள் போராட்டத்திற்கான தேதியும், இடத்தையும் குறிப்பிட்டு காவல்துறையினரின் முன் அனுமதி பெற்று இத்தகைய போராட்டங்களை நடத்துவது அவசியம்.

கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் மார்ச் 1ம் தேதியும், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மார்ச் 2ம் தேதியும், கடலூரில் 3ம் தேதியும். ஈரோட்டில் 4ம் தேதியும், திருச்சி, திருநெல்வேலியில் மார்ச் 5ம் தேதியும்,

திருப்பூர், நாகையில் மார்ச் 6ம் தேதியும், நீலகிரி, தூத்துக்குடியில் 7ம் தேதியும் போராட்டங்களை நடத்த வேண்டும்.

அதே போல் வேலூர், மதுரையில் 8ம் தேதியும். திருவண்ணாமலை, சேலத்தில் 9ம் தேதியும், காஞ்சிபுரம், சிவகங்கையில் 10ம் தேதியும், நாமக்கல், திருவள்ளூரில் 11ம் தேதியும்,

திண்டுக்கல், திருவாரூரில் 12ம் தேதியும், பெரம்பலூர், தர்மபுரியில் 13ம் தேதியும், புதுக்கோட்டை, அரியலூரில்14ம் தேதியும், விருதுநகர், கரூரில் 15ம தேதியும் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+