குஜராத்: காணாமல் போன 228 பேர் இறந்தவர்களாக அறிவிப்பு
அகமதாபாத்: குஜராத் மாநிலம் கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவம் நடந்ததற்குப் பின்னர் நடந்த மதக் கலவரத்தின்போது காணாமல் போனவர்களை இறந்தவர்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு கோத்ராவில் ராம பக்தர்கள் சென்ற ரயில் எரிக்கப்பட்டது. இதையடுத்து முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது. முஸ்லீம் சமுதாயத்தினரை விரட்டி விரட்டி கொலை செய்தனர் சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கலவரத்தில் 952 பேர் கொல்லப்பட்டனர். 228 பேர் காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில், சட்டப்படி 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போனவர்கள் இறந்தவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
அந்த வகையில், குஜராத் கலவரத்தின்போது காணாமல் போன 228 பேரையும் இறந்தவர்களாக அறிவிக்கப்படவுள்ளனர். இதையடுத்து குஜராத் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1180 ஆக உயரும்.
இதுகுறித்து குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் பல்வந்த் சிங் கூறுகையில், காணாமல் போனவர்களின் பட்டியலை நாங்கள் தயாரித்துள்ளோம். இவற்றை வருவாய்த்துறைக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள், இவர்களை இறந்தவர்களாக அறிவிப்பார்கள்.
அதன் பின்னர் வருவாய்த்துறை இந்தப் பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கும் என்றார்.
இதற்கிடையே அகமதாபாத் கலெக்டர் ஹரீத் சுக்லா கூறுகையில், காணாமல் போனவர்கள் பட்டியலை போலீஸாரிடமிருந்து இன்னும் நாங்கள் பெறவில்லை. அதற்காக காத்திருக்கிறோம்.
பட்டியல் கிடைத்ததும், அவற்றில் இடம் பெற்றுள்ளவர்களை இறந்தவர்களாக நாங்கள் அறிவிப்போம். இறந்தவர்களாக அறிவிக்கப்படுகிற நபர்களின் இறப்புச் சான்றிதழ் அவர்களுடைய குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு உரிய நிவாரணத் தொகைக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு












Click it and Unblock the Notifications