கொழும்பு செல்கிறார் மேனன் - ராஜபக்சேவுடன் பேச்சு
டெல்லி: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கொழும்பு செல்லவுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து போர் முன்னேற்றம் குறித்து விவாதிக்கவுள்ளார்.
இலங்கை செல்லும் ராஜபக்சே, வன்னிப் பகுதியில் நிலவி வரும் சூழல் குறித்து ராஜபக்சேவுடன் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை குறித்து இந்தியாவின் கவலையை அவர் இலங்கை அரசுக்குத் தெரிவிப்பதுடன், தற்போது நடைபெற்று வரும் மோதல்களுக்கான அரசியல் தீர்வு குறித்தும் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் கூட்டமைப்பின் வெளிவிவகார அமைச்சர்களுக்கான கூட்டத்தொடரை தொடர்ந்து ராஜபக்சேவை, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்திப்பதாக திட்டமிட்டப்பட்டிருந்தது.
ஆனால் தனது பயணத்தை பிரணாப் முகர்ஜி ரத்து செய்து விட்டார். இதையடுத்து மேனன் கொழும்பு சென்று ராஜபக்சேவை சந்திக்கவுள்ளார்.