For Daily Alerts
Just In
ஈரோடு காங்கிரஸ் அலுவலகத்தில் கொள்ளை!
ஈரோடு: ஈரோடு அருகே காங்கிரஸ் அலுவலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து ரூ.6,000 மற்றும் முக்கிய ஆவணங்களைத் திருடிச் சென்றனர்.
ஈரோடு பழையபாளைத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவராவார். இவரது அலுவலகம் சக்தி ரோட்டில் உள்ளது.
அலுவலகத்தில் வழக்கம் போல் கட்சி பணிகளை முடித்து வீட்டிற்கு சென்ற ஆறுமுகம், காலையில் அலுவலகத்தை திறக்க வந்தார்.
அப்போது பூட்டு உடைக்கப்பட்டு, டேபிளில் வைக்கப்பட்டிருந்த ரூ 6,000 பணம் திருடப்பட்டிருந்தது. மேலும் பல ஆவணங்களும் கொள்ளயடிக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் அலுவலகங்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறி்ப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, February 28, 2009, 12:53 [IST]