விமானங்களுக்கான பெட்ரோல் விலை குறைப்பு
டெல்லி: விமானங்களுக்கான பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் 7 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.
இதன்படி டெல்லியில் ஆயிரம் லிட்டருக்கு 2 ஆயிரத்து 52 ரூபாயும், மும்பையில் 2 ஆயிரத்து 124 ரூபாயும் குறைக்கப்பட்டு உள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்து உள்ளது.
ஒவ்வொரு விமான நிலையங்களிலும் அந்தந்த மாநில உள்ளூர் வரி மற்றும் இதர வரிகளுக்கு ஏற்ப இந்த விலை குறைப்பில் வேறுபாடு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நேற்று வரை 11 முறை விமானங்களின் பெட்ரோல் விலையை குறைத்து உள்ளன. ஆனால் சாதாரண பெட்ரோல் - டீஸலுக்கு 2 முறை மட்டுமே குறைக்கப்பட்டது.
ஆனால் விமானங்களின் டிக்கெட் விலை ஒரு முறை குறைக்கப்பட்டு, மீணடும் குறைக்கப்பட்டதை விட அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பால் விமான நிறுவனங்கள் பலமடங்கு அதிக லாபம் குவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் சலுகைகள் பயணிகளுக்கு முற்றிலுமாகக் கிடைக்காத நிலை தொடர்கிறது!