கோவிலுக்குள் சட்டையுடன் சென்ற சிறுவனை அடித்து உதைத்த கொடூரம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை கோவிலுக்குள் சட்டை போட்டபடி சென்றதற்காக அங்கிருந்த வாட்ச்மேன் சிறுவனை அடித்து உதைத்த கொடூரம் நடந்துள்ளது.
நாங்குநேரியை சேர்ந்த வானமாமலை மகன் கிருஷ்ணன். முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி கிருஷ்ணனின் பேரனான இவன் கடந்த ஜனவரி 25ம் தேதி நாங்குநேரி வானமாமலை கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
அப்போது அங்குள்ள காவலாளி உடையார் என்பவர் சிறுவன் கிருஷ்ணன் சட்டையை கழற்றி வரவில்லை என்பதற்காக அவரை அடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் வானமாமலை புகார் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications