ராஜபக்சே வெற்றி பெற்று கொண்டிருக்கிறார்-கருணா
கொழும்பு: அரசியல் ரீதியாக ராஜபக்சே வெற்றி கண்டு வருகிறார் என்று கூறியுள்ளார் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கண்ட கருணா.
சிங்களப் பத்திரிக்கை ஒன்றுக்கு கருணா அளித்துள்ள பேட்டியில்,
பிரபாகரன் உருவாக்கப்பட்ட தலைவர் தான். நான் மற்றும் சில தலைவர்கள் இணைந்து தான் அவரை உருவாக்கினோம். அவர் போர் முனைக்கு வந்ததும் இல்லை. மக்களை சந்தித்ததும் இல்லை.
பிரபாகரன் தமிழர்களுக்காக எதுவுமே செய்யவில்லை.
தமிழர்கள் தனி நாடு கோரவில்லை. சம உரிமைதான் கோருகின்றனர். கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் எங்களுக்கு வேண்டும் என கூறுகிறோம். தேவையான வளர்ச்சி, அமைதியான வாழ்க்கை, கல்வி ஆகியவற்றைதான் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வவுனியாவில் உள்ள அகதிகள் முகாம் சித்திரவதைக் கூடமாக உள்ளது என்பது புலிகளின் திட்டமிட்ட பொய் பிரசாரம் ஆகும்.
சித்திரவதைக் கூடம் எனக் கூறுபவர்கள், அகதிகள் முகாமுக்கு பிரபாகரன்தான் தற்கொலைப் படையை அனுப்பினார் என்பதை மறக்கக்கூடாது. அரசியல் ரீதியாக ராஜபக்சே வெற்றி கண்டு வருகிறார் என்றார் கருணா.












Click it and Unblock the Notifications