For Daily Alerts
Just In
கென்யா மாணவி சேலத்தில் மர்ம மரணம்
சேலம்: கென்யாவைச் சேர்ந்த மாணவி சேலத்தில் ரத்தவாந்தி எடுத்து பரிபாதமாக இறந்தார்.
சேலம் அரியானூரில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது.
இந்த கல்லூரியில் கென்யா நாட்டை சேர்ந்த மாணவி ஈவ்லின் மும்பிகரும்பா (23) எம்பிபிஎஸ் 5 -ம் வருடம் படித்து வந்தார்.
தனது தோழிகள் சிலருடன் அழகாரபுரம் முன்னாள் ராணுவத்தினர் காலனியில் வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் இவர் திடீரென ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த தோழிகள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் பரிதாபமாக இறந்து போனார்.
Story first published: Monday, March 2, 2009, 11:47 [IST]