இருதய ஆபரேஷனுக்கு பணமின்றி தவிக்கும் 3 வயது சிறுவன்
திருச்சி: திருச்சியில் இருதய நோயால் மூன்று வயது சிறுவன் கடும் துயரம் அனுபவித்து வருகின்றான். அறுவைச் சிகிச்சை செய்ய பணம் இல்லாமல், அவனது ஏழைக் குடும்பம் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளது.
திருச்சி கீழ்கண்டார் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராமசந்திரன் (30), இவர் பொன்மலை காந்தி மார்க்கெட்டில் பழம் வாங்கி வந்து தலையில் வைத்து தினசரி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மனைவி சித்ரா (25). கூலி வேலை செய்கிறார். இவர்களுக்கு விக்னேஷ் (5), நாகேந்திரன் (3) என்ற இரண்டு மகன் உள்ளனர்.
இதில் நாகேந்திரனுக்கு இதயத்தில் சிறு ஓட்டை இருந்துள்ளது. மேலும் இதயத்தில் நல்ல ரத்தத்தையும், அசுத்த ரத்தத்தையும் பிரிக்கும் இரு வால்வுகளும், இதயத்தின் வலதுபக்கமாக ஒரே இடத்தில் உள்ளன.
இதனால் ஒரு வால்வைப் பிரித்து இடப் பக்கம் வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தப் பிரச்சனையால் சிறுவன் நாகேந்திரன் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளான். நிற்கக் கூட முடியாமல் பல நேரங்களில் சிரமம் ஏற்படுகிறது.
மகன் படும் வேதனையை சகித்துக் கொள்ள முடியாமல் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் மேல் சிகிச்சைக்காக, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதனால் அக்கம் பக்கத்தில் சில ஆயிரம் ரூபாய்கள் கடன் வாங்கிக் கொண்டு அங்கு சென்றும் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் பலன் இல்லை.
எப்படியும் மகனை நோயின் கோரப்பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்று முடிவு செய்த ராமசந்திரன் தனது மனைவியின் நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்துள்ளார்.
அங்கு பரிசோதனைகளை முடித்த டாக்டர்கள் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனைகளை முடிந்த நிலையில் அந்த சிறுவனுக்கு இருதய ஆபரேஷன் செய்ய ரூ 2 லட்சம் தேவை என்று மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு போவது என்று தெரியாமல், நாகேந்திரனின் குடும்பம் மலைத்துப் போயுள்ளது.
இந்தக் குழந்தைக்கு உதவி செய்ய நினைப்போர் உதவலாம்..
சிறுவனின் முகவரி:
பெயர் - நாகேந்திரன்,
தந்தை பெயர் - ராமச்சந்திரன்,
2-123, பெரியார் தெரு,
கீழ்கண்டார் கோட்டை,
திருச்சி - 620 011.
மருத்துவரின் பெயர்: டாக்டர் சி.எஸ்.முத்துக்குமரன்,
அப்பல்லோ மருத்துவமனை,
தொலைபேசி எண்: 044-28296749,
இ மெயில்: [email protected],
-
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!













Click it and Unblock the Notifications