இருதய ஆபரேஷனுக்கு பணமின்றி தவிக்கும் 3 வயது சிறுவன்
திருச்சி: திருச்சியில் இருதய நோயால் மூன்று வயது சிறுவன் கடும் துயரம் அனுபவித்து வருகின்றான். அறுவைச் சிகிச்சை செய்ய பணம் இல்லாமல், அவனது ஏழைக் குடும்பம் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளது.
திருச்சி கீழ்கண்டார் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராமசந்திரன் (30), இவர் பொன்மலை காந்தி மார்க்கெட்டில் பழம் வாங்கி வந்து தலையில் வைத்து தினசரி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மனைவி சித்ரா (25). கூலி வேலை செய்கிறார். இவர்களுக்கு விக்னேஷ் (5), நாகேந்திரன் (3) என்ற இரண்டு மகன் உள்ளனர்.
இதில் நாகேந்திரனுக்கு இதயத்தில் சிறு ஓட்டை இருந்துள்ளது. மேலும் இதயத்தில் நல்ல ரத்தத்தையும், அசுத்த ரத்தத்தையும் பிரிக்கும் இரு வால்வுகளும், இதயத்தின் வலதுபக்கமாக ஒரே இடத்தில் உள்ளன.
இதனால் ஒரு வால்வைப் பிரித்து இடப் பக்கம் வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தப் பிரச்சனையால் சிறுவன் நாகேந்திரன் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளான். நிற்கக் கூட முடியாமல் பல நேரங்களில் சிரமம் ஏற்படுகிறது.
மகன் படும் வேதனையை சகித்துக் கொள்ள முடியாமல் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் மேல் சிகிச்சைக்காக, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதனால் அக்கம் பக்கத்தில் சில ஆயிரம் ரூபாய்கள் கடன் வாங்கிக் கொண்டு அங்கு சென்றும் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் பலன் இல்லை.
எப்படியும் மகனை நோயின் கோரப்பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்று முடிவு செய்த ராமசந்திரன் தனது மனைவியின் நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்துள்ளார்.
அங்கு பரிசோதனைகளை முடித்த டாக்டர்கள் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனைகளை முடிந்த நிலையில் அந்த சிறுவனுக்கு இருதய ஆபரேஷன் செய்ய ரூ 2 லட்சம் தேவை என்று மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு போவது என்று தெரியாமல், நாகேந்திரனின் குடும்பம் மலைத்துப் போயுள்ளது.
இந்தக் குழந்தைக்கு உதவி செய்ய நினைப்போர் உதவலாம்..
சிறுவனின் முகவரி:
பெயர் - நாகேந்திரன்,
தந்தை பெயர் - ராமச்சந்திரன்,
2-123, பெரியார் தெரு,
கீழ்கண்டார் கோட்டை,
திருச்சி - 620 011.
மருத்துவரின் பெயர்: டாக்டர் சி.எஸ்.முத்துக்குமரன்,
அப்பல்லோ மருத்துவமனை,
தொலைபேசி எண்: 044-28296749,
இ மெயில்: [email protected],
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்













Click it and Unblock the Notifications