அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச சிபிஎம் குழு அமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் சென்னையி்ல் இன்று நடந்தது. செயற்குழு உறுப்பினர் நூர்முகம்மது தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மாநில செயலாளர் என்.வரதராஜன், மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் என். சங்கரய்யா, மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உள்பட செயற்குழு மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்திட 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் என்.வரத ராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications