தடையை மீறி முன்னாள் போலீஸார் உண்ணாவிரதம்!
கோவை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீஸாரை பலிகடாவாக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோவையில் வருகிற 6ம் தேதி திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என முன்னாள் போலீஸார் மற்றும் போலீஸ் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் ஓய்வு பெற்ற போலீசார் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தற்போது மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. கோவையில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சங்கத்தினர் வருகிற 6-ந்தேதி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
கோவை காந்திபுரம் பகுதியில், உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் காவல்துறை ஆணையர் மாஹாலியிடம் மனு தரப்பட்டது.
இதுகுறித்து கோவை முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சங்க செயலாளரும், ஓய்வு பெற்ற எஸ்.பியுமான வேலு கூறுகையில்,
சென்னை ஐகோர்ட்டில் நடந்த போலீஸ் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது. வழக்கு விசாரணைக்கு செல்லும் போலீஸ் அதிகாரிகள் மீதும் இதுபோல பலமுறை தாக்குதல்கள் நடந்துள்ளன. சட்டத்தை மீறி போலீஸ் நிலையத்துக்கு தீ வைத்தவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துமீறலில் ஈடுபட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தியும், ஐகோர்ட்டு மோதல் சம்பவத்தை கண்டித்தும் கோவை காந்திபுரம் மத்திய பஸ்நிலையம் எதிரில் வருகிற 6-ந்தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். போலீசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்றார்.
இந்த போராட்டத்தில் போலீஸ் குடும்பத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரி சங்கம் சார்பில் போலீஸாரின் இல்லங்களுக்கு நேரில் சென்று துண்டுப் பிரசுரங்களையும் சங்க நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications