கூட்டணி-நி்ர்வாகிகளுடன் விஜய்காந்த் ஆலோசனை
சென்னை: மக்களவைத் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் இன்று முக்கிய நிர்வாகிகளுடன் தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆலோசனை நடத்தினார்.
மக்களவை தேர்தலில் தங்களுடன் கூட்டணி அமைக்குமாறு காங்கிரஸ், பாஜக ஆகியவை தேமுதிகவுக்கு நேரடி அழைப்பு விடுத்துள்ளன.
இந் நிலையில் மரியாதை படப்பிடிப்புக்காக தாய்லாந்து, ஆஸ்திரேலியா சென்றுள்ள விஜய்காந்த் திரும்பி வந்த பின்னரே கூட்டணியா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருந்தார்.
விஜய்காந்த் நாளை தான் சென்னை வருவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், நேற்று நள்ளிரவே அவர் சென்னை திரும்பிவிட்டார்.
இன்று காலை தலைமை அலுவலகம் வந்த அவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கூட்டணியில் சேரலாமா, அல்லது தனித்து போட்டியிடலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. திமுக கூட்டணியில் சேராமல் காங்கிரசுடன் மட்டும் கூட்டணி என்றரீதியில் அவர் இடப் பகிர்வுக்கு முன் வரலாம் என்று கூறப்படுகிறதி.












Click it and Unblock the Notifications