இன்று உயர்நீதிமன்றம் அருகே வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்
சென்னை: வக்கீல்களைத் தாக்கிய போலீஸ் உயர்திகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று சென்னை உயர்நீதிமன்றம் அருகே வக்கீல்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற வக்கீல்கள் தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதமும் இருந்து வருகின்றனர்.
நேற்று காலை வக்கீல்களிடையே வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுதினம் (நாளை) வழக்கு விசாரணைக்கு வருகிறது. நல்ல உத்தரவு வரும் என்று நம்பிக்கையோடு உள்ளோம்.
வக்கீல்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாளை (இன்று) பிற்பகல் உயர்நீதிமன்றத்தைச் சுற்றி மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறோம்.
இதில் உயர்நீதிமன்றம் மட்டுமின்றி சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்ற வக்கீல்களும் கலந்து கொள்கின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications