பிஎஸ்என்எல் சேவை கட்டணம் குறைப்பு!
சென்னை: வேக வேகமாக வெளியேறிக் கொண்டிருக்கும் தனது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள, டெலிபோன் பில்லில் விதிக்கப்படும் சேவை வரியை 2.36 வரை குறைத்துள்ளது பிஸ்என்எல்.
பி.எஸ்.என்.எல். வழங்கும் லேண்ட் லைன் சேவைக்கு மாநில அரசு சேவை வரி வசூலிக்கிறது.
மாதாந்திர பில் தொகையில் 12.36 சதவிகிதம் வரை இந்த சேவை வரி விதிக்கப்படுகிறது. இந்தத் தொகை முழுமையாக மாநில அரசுக்கே செல்கிறது.
இந்நிலையில் இந்த சேவை வரியை 10 சதவிகிதமாக குறைத்து பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. இப்போது 2.36 சதவிகித சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் இது நடைமுறைக்கு வந்தது.
சாதாரண டெலிபோன் வைத்திருப்பவர்கள் அதை சரண்டர் செய்து விட்டு செல்போன் சேவைக்கு மாறி வருவதால் அவற்றை தடுக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பி.எஸ்.என்.எல். இண்டர்நெட் சேவை பெறுபவர்கள் சாதாரண டெலிபோன் சேவையை சேர்த்தே பெறுகிறார்கள். இவர்களது டெலிபோன் பில் தொகையில் சேவை வரிதான் பெருமளவில் வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கு பிஎஸ்என்எல்லின் இந்த அறிவிப்பு பெரிதும் ஆறுதலாக அமைந்துள்ளது.
சென்னை தவிர தமிழ்நாட்டில் 30 லட்சம் லேண்ட் லைன் வாடிக்கையர்களும் சென்னையில் 10 வாடிக்கையாளர்களும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications