ஜீயர் கடத்தப்படவில்லை - சொந்த ஊருக்குப் போயுள்ளார்: திருச்சி போலீஸ்
திருச்சி: கொல்லப்பட்டதாக கூறப்பட்ட திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் சொந்த ஊரான கொல்கத்தாவில் பத்திரமாக இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த கோவிந்த ராமானுஜ தாசர் என்பவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஹேபியஸ் ஹார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில்,
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பாலகாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் தலைமை ஜீயராக லட்சுமண ராமானுஜ ஜீயர் இருந்து வருகிறார். கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி நான் ஜீயரை தரிசிக்க மடத்துக்கு சென்றேன். ஆனால் அங்கு அவர் இல்லை. அவரது பணிகளை பத்ரிநாராயணன் என்பவர் செய்து வருகிறார்.
பத்ரிநாராயணன் ஒரிசாவை சேர்ந்தவர். அவர் மடத்தில் இருக்கும் பல கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறார். அவர் ஜீயரை மிரட்டி தனது பெயரில் மடத்தின் பவர் ஆப் அட்டார்னியை வாங்கி கொண்டுள்ளார்.
பத்ரிநாராயணன் மீது பெண்ணை கடத்தியாக ஏற்கனவே போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ஜீயர், பத்ரிநாராயணனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் ஜீயரை காணவில்லை. அவரை கண்டுபிடிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டனர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர்(பொறுப்பு) காந்தி, இன்ஸ்பெக்டர் சுகுமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஸ்ரீரங்கம் லட்சுமண நாராயண ஜீயர் தனது சொந்த ஊரான கொல்கத்தாவில் இருப்பது தெரியவந்ததுள்ளது. மனுவில் குற்றசாட்டப்பட்டுள்ள பத்ரிநாராயணன் ஜீயரின் வளர்ப்பு மகளின் கணவர் என்பதும், இதன்மூலம் பத்ரிநாராயணன் அவரது மருமகன் என்பதும் தெரிய வந்துள்ளது.
தற்போது 83 வயதாகிவிட்டதால் ஜீயர், ஸ்ரீரங்கத்தில் இருந்து கடந்த 19ந் தேதி ரெயில் மூலம் கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஜீயரிடம் ஸ்ரீரங்கம் போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது தான் பத்திரமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications