கொத்தடிமைகளாக மலேசியாவில் தவித்த 43 தமிழர்கள் நாடு திருமபினர்
சென்னை: மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றப்பட்டு அங்கு கொத்தடிமைகளாக இருந்து வந்த 43 தமிழர்கள் நேற்று சென்னை வந்தனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகள் மாவட்டத்தை சேர்ந்த 43 தமிழர்கள் கடந்த 2005ம் ஆண்டு மலேசியாவில் வேலை பார்க்கும் ஆசையி்ல் ஏஜென்டுகளை நாடியுள்ளனர்.
அப்போது ஏஜென்டுகள் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூற, அவர்கள் மலேசியாவுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற பின்னர் தான் அவர்களுக்கு கப்பல் வேலை என கூறி ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு சம்பளமும் முழுமையாக தரப்படவில்லை. அவர்கள் அங்கு கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டனர். கொடுமை தாங்க முடியாத அவர்கள் தாங்கள் சொந்த ஊருக்கு போவதாகவும், தங்களது பாஸ்போர்ட்டை திருப்பி கொடுக்கும்படியும் கேட்டனர்.
ஆனால், இவர்களின் கோரிக்கைகள் காதில் வாங்க மறுத்த அந்த நிறுவனம். அவர்களை தொடர்ந்து துன்புறுத்திய வண்ணம் இருந்தது. இதையடுத்து அங்கு வேலை பார்த்து வந்தவர்களில் 8 பேர் அங்கிருந்து தப்பிவிட்டனர். பின்னர் மலேசியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் இந்திய தூதரகத்தில் தொடர்பு கொண்டு, புகார் செய்தனர்.
இதை தெரிந்து கொண்ட அந்நிறுவனம் 43 பேரும் மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறி, அவர்கள் மலேசிய குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களை மீண்ட இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தன்ர்.
நேற்று சென்னைக்கு விமானத்தில் வந்த அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.
-
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்












Click it and Unblock the Notifications