கொத்தடிமைகளாக மலேசியாவில் தவித்த 43 தமிழர்கள் நாடு திருமபினர்
சென்னை: மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றப்பட்டு அங்கு கொத்தடிமைகளாக இருந்து வந்த 43 தமிழர்கள் நேற்று சென்னை வந்தனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகள் மாவட்டத்தை சேர்ந்த 43 தமிழர்கள் கடந்த 2005ம் ஆண்டு மலேசியாவில் வேலை பார்க்கும் ஆசையி்ல் ஏஜென்டுகளை நாடியுள்ளனர்.
அப்போது ஏஜென்டுகள் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூற, அவர்கள் மலேசியாவுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற பின்னர் தான் அவர்களுக்கு கப்பல் வேலை என கூறி ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு சம்பளமும் முழுமையாக தரப்படவில்லை. அவர்கள் அங்கு கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டனர். கொடுமை தாங்க முடியாத அவர்கள் தாங்கள் சொந்த ஊருக்கு போவதாகவும், தங்களது பாஸ்போர்ட்டை திருப்பி கொடுக்கும்படியும் கேட்டனர்.
ஆனால், இவர்களின் கோரிக்கைகள் காதில் வாங்க மறுத்த அந்த நிறுவனம். அவர்களை தொடர்ந்து துன்புறுத்திய வண்ணம் இருந்தது. இதையடுத்து அங்கு வேலை பார்த்து வந்தவர்களில் 8 பேர் அங்கிருந்து தப்பிவிட்டனர். பின்னர் மலேசியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் இந்திய தூதரகத்தில் தொடர்பு கொண்டு, புகார் செய்தனர்.
இதை தெரிந்து கொண்ட அந்நிறுவனம் 43 பேரும் மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறி, அவர்கள் மலேசிய குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களை மீண்ட இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தன்ர்.
நேற்று சென்னைக்கு விமானத்தில் வந்த அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.
-
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications