குழந்தையை காக்க சென்னையில் அவசரமாக தரையிறங்கிய அபுதாபி விமானம்
சென்னை: அபுதாபியில் இருந்து ஜகார்த்தா சென்று கொண்டிருந்த விமானம், அதில் பயணம் செய்த குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அபுதாபியில் இருந்து இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவுக்கு நேற்று காலை எதியார்டு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 320 பயணிகளுடன் கிளம்பியது.
விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் விமானத்தில் இருந்த இந்தோனேசியாவை சேர்ந்து நூருல்லா என்ற பெண்ணின் 8 மாத குழந்தை ஒன்றுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுபோக்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து வாந்தியும் ஏற்பட அக்குழந்தையின் தாயார் அழ ஆரம்பித்தார்.
உடனடியாக இதை கவனித்த விமான சிப்பந்திகள் குழந்தையை காப்பாற்றும் பொருட்டு அருகிலிருந்த சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்டனர். உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து விமானம் காலை 9.10 மணிக்கு தரையிறங்கியது.
அக்குழந்தை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. விமானத்தில் வந்த பயணிகளுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டு அவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சர்வதேச விமான விதிகளின் படி விமானம் ஒரு முறை அவசரமாக தரையிறக்கப்பட்டால், அதன்பின்னர் 10 மணி நேரம் கழித்து தான் புறப்படும். இதனால் அந்த விமானம் நேற்று இரவு 8.30 மணிக்கு இந்தோனேசியா நோக்கி கிளம்பியது.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications