பங்குச் சந்தை: தொடரும் நஷ்டம்
மும்பை: இரண்டாவது வாரமாக தொடர் சரிவைச் சந்தித்துள்ளது இந்தியப் பங்குச் சந்தை. இன்று சென்செக்ஸ் 153 புள்ளிகள் குறைந்து, முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தயது.
சர்வதேச பொருளாதாரம் மிக மோசமான கட்டத்துக்குச் சென்றுவிட்டதால் அதன் விளைவு இன்று உலகமெங்கும் உள்ள சந்தைகளில் வெகுவாக எதிரொலித்தது. சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 165 புள்ளிகள் குறைந்திருந்தது. நிப்டியிலும் 47 புள்ளிகள் சரிந்தது.
வர்த்தக நேரத்தின் ஆரம்பத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் இதை விட இன்னும் மோசமாகக் குறைந்திருந்தது. அனைத்துத் துறை பங்குகளிலும் வாஙஅகுவதை விட விற்பதில்தான் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகமாக இருந்தது.
ரியல் எஸ்டேட் மற்றும் வங்கித் துறை பங்குகள் மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தன.
ஸ்டேட் வங்கி, டிஎல்எப், பிபிசிஎல் போன்ற நிறுவனப் பங்குகள் பெரும் சரிவுக்குள்ளாகின.
எச்டிஎப்சி, கெய்ல், கெய்ர்ன் இந்தியா பங்குகள் ஓரளவு தப்பித்துக் கொண்டன.
உலகம் முழுக்க, குறிப்பாக ஆசியாவின் அனைத்து பங்குச் சந்தைகளிலும் இதே போக்குதான் இன்று நிலவியது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ்: 8160.40 (-165.42), நிப்டி: 2573.15(-47) என நிலைபெற்றது.