கரூரில் அதிமுகவினர் அடிதடி-விழா மேடையில் ரணகளம்
கரூர்: கரூரில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் இரண்டு கோஷ்டியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் விழா மேடை அடித்து நொறுக்கப்பட்டது.
இலங்கை தமிழர் படுகொலைக் கண்டித்து பிறந்த நாள் விழா கொண்டாப்படுவதில்லை என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இருப்பினும் தமிழகம் முழுக்க ஜெயலலிதாவின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை அதிமுகவினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவில் 27 -வது வார்டு சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் கல்வெட்டில் பெயர் பதித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமியின் ஆதரவாளர் கவுன்சிலர் சீனிவாசனுக்கும், கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தரப்பைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சேர், நாற்காலி, டியூப் லைட், போன்றவைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
தகவல் அறிந்த கரூர் டிஎஸ்பி அரவிந்த், இன்ஸ்பெக்டர் தங்கவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பலர் திடீர் தலைமறைவாகிவிட்டனர்.
இதனால் கரூர் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு












Click it and Unblock the Notifications