For Daily Alerts
Just In
ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளும் மரணம்!
கும்பேகாணம் : கும்பகோணம் அருகே ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் குறைந்த எடையுடன் பிறந்த மூன்று குழந்தைகளும் பரிதாபமாக இறந்தன.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பிடாரி அம்மன்குளம் களத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (27). இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சித்ரா கர்ப்பம் அடைந்தார். பிரசவ வலி காரணமாக அவர் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சித்ராவுக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன.
ஆனால், மூன்று குழந்தைகளும் சுமார் 600 கிராம் முதல் 800 கிராம் மட்டுமே இருந்தன. இதனால் டாக்டர்கள் அந்த குழந்தைகளை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த 3 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன.
Story first published: Monday, March 9, 2009, 12:06 [IST]