காவல் நிலையத்தில் எஸ்ஐ தற்கொலை
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள கரூர் புறக்காவல் நிலையத்தில் எஸ்ஐ ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ளது கரூர் புறக்காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராமன் (55). இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் பயந்த சுபாவம் உடையவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர் இரவு பணியில் இருந்த போது தூக்கம் வருவதாக சக போலீசாரிடம் கூறிவிட்டு கம்யூட்டர் அறைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அந்த அறைக்கு ஒரு போலீசார் சென்று பார்த்த போது அங்கு எஸ்ஐ ராமன் மின்விசிறியில் தூக்கு மாட்டி பிணமாக தொங்கியுள்ளார்.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த எஸ்பி மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் எஸ்ஐ ராமன் தற்கொலைக்கு காரணம் என்ன என்று கரூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட எஸ்ஐ ராமனுக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேடு. இவருக்கு ஒரு மனைவி 2 மகன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications