Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மெட்ரோ-வடிவமைக்கும் பிரான்ஸ் நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

Chennai Metro
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்ட வடிவமைப்புப் பணிகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம்தான் மெட்ரோ ரயில் திட்டதிதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முதல் கட்டணப் பணிகளுக்கான கான்ட்ராக்டுகள் விடப்பட்டன.

இந் நிலையில், தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தை வடிவமைத்து, அதைக் கண்காணித்து செயல்படுத்தும் பொறுப்பை பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுக்கு மெட்ரோ ரயில்வே வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக 30 மில்லியன் டாலர் கான்டிராக்டை சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ஏஜிஸ் ரயில் இந்தியா என்ற ஐந்து நிறுவனங்கள் அடங்கிய அமைப்பிடம் வழங்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போக்குவரத்து அடிப்படைக் கட்டமைப்பு நிறுவனமான ஏஜிஸ், இந்த கூட்டு நிறுவனத்திற்கு தலைமை வகிக்கும்.

மேலும், ஏகாம் டெக்னாலஜி கார்ப்பரேஷன் என்கிற பொறியியல் மற்றும் கட்டிடக் கலை நிறுவனமும் இதில் இடம் பெற்றுள்ளது.

மற்ற நிறுவனங்கள் குறித்து தெரியவில்லை. இருப்பினும் இந்த ஐந்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஏஜிஸ் நிறுவனம்தான் இந்த திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தப் போகிறது.

கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கான்டிராக்டுகளுக்கான டெண்டர் விடும் பணியை தொடர்ந்து மெட்ரோல் ரயில் கார்ப்பரேஷன் நிறுவனமே மேற்கொள்ளும்.

ஏஜிஸ் நிறுவனம், ஐரோப்பாவின் முன்னணி ரயில் திட்ட நிறுவனமாகும். அதி வேக புல்லட் ரயில்கள், பாதாள ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ரயில் போக்குவரத்துத் திட்டங்களை இந்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு ஆசியாவிலிருந்து 9 சதவீத வருவாய் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே ஏஜிஸ் தலைமையிலான நிறுவன கூட்டமைப்புதான் கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனை கான்டிராக்டை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ ரயில் திட்டம் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படவுள்ளது. திட்டம் அறிவிக்கப்பட்ட 13 மாதங்களில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை இந்தத் திட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் நிதியுதவியும் உடனடியாக கிடைத்தது.

இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதியில் தமிழக அரசு 15 சதவீதத்தை வழங்கும். 6 சதவீதம் கடன்கள் மூலம் பெறப்படும்.

இத்திட்டத்தின் முதல் கட்டப் (கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை) பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டவுள்ளார்.

2015ம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை முடிக்க மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. அதே காலகட்டத்தில்தான் கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டமும் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+