சென்னை மெட்ரோ-வடிவமைக்கும் பிரான்ஸ் நிறுவனம்

கடந்த மாதம்தான் மெட்ரோ ரயில் திட்டதிதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முதல் கட்டணப் பணிகளுக்கான கான்ட்ராக்டுகள் விடப்பட்டன.
இந் நிலையில், தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தை வடிவமைத்து, அதைக் கண்காணித்து செயல்படுத்தும் பொறுப்பை பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுக்கு மெட்ரோ ரயில்வே வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக 30 மில்லியன் டாலர் கான்டிராக்டை சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ஏஜிஸ் ரயில் இந்தியா என்ற ஐந்து நிறுவனங்கள் அடங்கிய அமைப்பிடம் வழங்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போக்குவரத்து அடிப்படைக் கட்டமைப்பு நிறுவனமான ஏஜிஸ், இந்த கூட்டு நிறுவனத்திற்கு தலைமை வகிக்கும்.
மேலும், ஏகாம் டெக்னாலஜி கார்ப்பரேஷன் என்கிற பொறியியல் மற்றும் கட்டிடக் கலை நிறுவனமும் இதில் இடம் பெற்றுள்ளது.
மற்ற நிறுவனங்கள் குறித்து தெரியவில்லை. இருப்பினும் இந்த ஐந்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஏஜிஸ் நிறுவனம்தான் இந்த திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தப் போகிறது.
கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கான்டிராக்டுகளுக்கான டெண்டர் விடும் பணியை தொடர்ந்து மெட்ரோல் ரயில் கார்ப்பரேஷன் நிறுவனமே மேற்கொள்ளும்.
ஏஜிஸ் நிறுவனம், ஐரோப்பாவின் முன்னணி ரயில் திட்ட நிறுவனமாகும். அதி வேக புல்லட் ரயில்கள், பாதாள ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ரயில் போக்குவரத்துத் திட்டங்களை இந்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு ஆசியாவிலிருந்து 9 சதவீத வருவாய் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே ஏஜிஸ் தலைமையிலான நிறுவன கூட்டமைப்புதான் கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனை கான்டிராக்டை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரயில் திட்டம் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படவுள்ளது. திட்டம் அறிவிக்கப்பட்ட 13 மாதங்களில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை இந்தத் திட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் நிதியுதவியும் உடனடியாக கிடைத்தது.
இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதியில் தமிழக அரசு 15 சதவீதத்தை வழங்கும். 6 சதவீதம் கடன்கள் மூலம் பெறப்படும்.
இத்திட்டத்தின் முதல் கட்டப் (கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை) பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டவுள்ளார்.
2015ம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை முடிக்க மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. அதே காலகட்டத்தில்தான் கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டமும் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல்












Click it and Unblock the Notifications