தென்காசி தேர்தல் அலுவலர் திடீர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தென்காசி தொகுதி தேர்தல் அலுவலகராக இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நான்கு வழிச்சாலை நில ஆர்ஜித சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை பொது தொகுதியாகவும், தென்காசி தனித் தொகுதியாகவும் உள்ளது.

நெல்லை தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், ராதாபுரம், நாங்குநேரி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளும், தென்காசி தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளும் அடங்கும்.

நெல்லை தொகுதியின் தேர்தல் அலுவலராக கலெக்டரும், தென்காசி தொகுதியின் தேர்தல் அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலரும் நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி நெல்லை தொகுதி தேர்தல் பணிகளை கலெக்டர் பழனியாண்டியும், தென்காசி தொகுதி தேர்தல் பணிகளை நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசனும் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தென்காசி தொகுதியின் தேர்தல் அலுவலர் சீனிவாசன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நான்கு வழிச்சாலை நில ஆர்ஜித சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் தென்காசி தொகுதியின் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+