இன்னும் மருத்துவமனையில் சமரவீரா-மெண்டிஸ்
கொழும்பு: லாகூர் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஏழு இலங்கை வீரர்களில் சமரவீரா மற்றும் மெண்டிஸ் ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்மாதம் 3ம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாட சென்ற இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 போலீசார் பலியானார்கள். ஏழு இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து தொடர் ரத்து செய்யப்பட்டு இலங்கை வீரர்கள் உடனடியாக நாடு திரும்பினர்.
தாக்குதல் சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் சமரவீரா மற்றும் மெண்டிஸ் ஆகியோர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவர்கள் இருவரும் தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர்களின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
இது குறித்து இலங்கை விளையாட்டு அமைச்சகத்தின் தலைமை டாக்டர் கீதன்ஜனா மெண்டிஸ் கூறுகையில், அவர்கள் இருவரும் நன்றாக தேறி வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு தொடர்ந்து கவனமாக மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்பிவிடுவார்கள்.
சமரவீராவின் இடது தொடையில் பாய்ந்திருந்த துப்பாக்கி குண்டு அறுவை சிகிச்சைக்கு பின் நீக்கப்பட்டுவிட்டது. மெண்டிசின் தலையில் ஏற்பட்டுள்ள காயம் ஆறிவருகிறது. இவர்களுக்கென பிரத்யேக உடல்அசைவு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னும் பல நாட்களுக்கு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்றார் டாக்டர் கீதன்ஜனா மெண்டிஸ்.
காயமடையாத இலங்கை வீரர்கள் அடுத்த வாரம் பயிற்சியை துவக்கவிருக்கின்றனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications