அண்ணாமலை பல்கலையில் முறைகேடு-மூட்டா புகார்
Subscribe to Oneindia Tamil
மதுரை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் யுசிஜி விதிகளுக்கு முரணாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது என மூட்டா குற்றம் சாட்டியுள்ளது.
மூட்டா பொதுச் செயலாளர் பேராசிரியர் விவேகானந்தன் கூறுகையில்,
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் யுசிஜி விதிகளுக்கு முரணாக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களது ஓய்வூதிய நிதியிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது
இந்த பிரச்சினையில் தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் உடனடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் தவறான போக்கை எதிர்த்து போராடி வரும் சிதம்பரம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மூட்டா ஆதரவு அளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications