ஹிந்துகுஷ் மலையில் ஒசாமா பின்லேடன் பதுங்கல்?

உலகின் அதிபயங்கர தீவிரவாதியான ஒசாமா பின்லேடனை அமெரிக்க அரசு கடந்த பல ஆண்டுகளாக தேடிவருகிறது. உலக வர்த்தக மைய பயங்கர சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான இவரை எப்படியும் கைது செய்துவிட வேண்டும் என அமெரிக்கா, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் சல்லடை போட்டு தேடி வருகிறது.
ஆனால் பின்லேடனின் நிழலைக் கூட அமெரிக்காவில் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அவர் ஹிந்துகுஷ் மலைபகுதியில் உள்ள சித்ரல் பள்ளத்தாக்கு பகுதியில் பதுங்கியிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்து நியூயார்க் டெய்லி நியூஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்,
நியூயார்க் உலக வர்த்தக மையத்தை தகர்த்து 3 ஆயிரம் பேர் பலியாக முக்கிய காரணமான பின்லேடன் சித்ரல் பள்ளத்தாக்கில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பகுதியில் அன்னியர்கள் நுழைய முடியாதபடி கடும் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் அமெரிக்க உளவு விமானங்கள் அடிக்கடி பறந்து வருகின்றன.
லேடன் இங்குதான் பதுங்கியிருப்பதாக ஆறு அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பின்லேடனின் பேட்டி அடங்கிய டேப் மற்றும் பேட்டி கொடுத்த இடம் ஆகியவையும் இதை உறுதி செய்துள்ளன.
அதேநேரத்தில் இந்த பள்ளத்தாக்கு பகுதியில் அல் கொய்தா ஆதிக்கம் அதிகரித்திருப்பது பின்லேடன் அப்பகுதியில் தான் இருக்க வேண்டும் என்பதை மேலும் ஊர்ஜிதப்படுத்துகிறது.
அதேசமயம், அருகில் இருக்கும் கலாம் நகரில் பின் லேடன் பதுங்கியிருக்கலாம் என இரு அதிகாரிகள் கூறியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.












Click it and Unblock the Notifications