ராணுவம் மீது புலிகள் தற்கொலைப் படைத் தாக்குதல்
கொழும்பு: வன்னிப் பகுதியில் ராணுவ சீருடையில் வந்து விடுதலைப் புலிகள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆனால் இதில் ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை என்று ராணுவம் கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையிலான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. ராணுவத்தின் முன்னெடுப்புகளை விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு தடுத்து வருகின்றனர்.
இதனால் முன்பு போல வேகமாக முன்னேற முடியாமல் தத்தளிக்கிறது இலங்கை ராணுவம்.
இந்த நிலையில் தற்கொலைப் படைத் தாக்குதல்களையும் புலிகள் அதிகரித்து வருகின்றனர்.
நேற்று ராணுவ வீரர்களைக் குறி வைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்துள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில்,
புதுக்குடியிருப்புப் பகுதியில், ராணுவ நிலை ஒன்றை நோக்கி ராணுவ சீருடையில் ஒரு நபர் வந்தார். இதையடுத்து அவரைப் பரிசோதிக்க ஒரு ராணுவ வீரர் சென்றார். அவர் நெருங்கி வந்தபோது அந்த மர்ம நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.
அதிர்ஷ்டவசமாக இதில் ராணுவ தரப்புக்கு எந்த உயிர்ச்சேதமும் இல்லை என்றார்.
இன்னொரு பகுதியில், 14 விடுதலைப் புலிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் நாணயக்காரா தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் விடுதலைப் புலிகள் தற்கொலைப் படைத் தாக்குதல்களை அதிகரிக்க ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications