தமிழகத்தில் 46 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் 46 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத் தலைமை தேர்தல் ஆணையரின் கடிதத்தை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்லது.
இதில் சென்னையில் மட்டும் 10 உதவி கமிஷனர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் டிஎஸ்பி அந்தஸ்தில் இருந்தவர்களாவர்.
லீனா நாயர் மாற்றம்:
அதே போல கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் லீனா நாயர் மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, தமிழ்நாடு கடல்சார் வாரியத் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி முத்துகுமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இவர் வகித்து வந்த பதவி, லீனா நாயரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல தமிழ்நாடு உப்புத் துறையின் மேலாண் இயக்குனர் ராமநாதன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெடிமருந்துத் துறையின் மேலாண் இயக்குனர் மோகனிடம், உப்புத் துறை மேலாண் இயக்குனர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.