தொகுதி: இன்று அதிமுக-மதிமுக 3வது சுற்று பேச்சு
சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக இன்ற அதிமுக-மதிமுக தேர்தல் குழுவினர் 3வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந் நிலையில் தொகுதிப் பங்கீடு, மு.கண்ணப்பன் விலகல் ஆகியவை குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று ஆலோசனை நடத்தினார்.
கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இக் கூட்டத்தில் நிர்வாகிகள் டாக்டர் மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, துரைபாலகிருஷ்ணன், எம்.பிக்கள் சிப்பிபாறை ரவிச்சந்திரன், கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கலைப்புலி தாணு, மலர்மன்னன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிமுகவிடம் கேட்க வேண்டிய தொகுதிகளின் பட்டியல் குறித்தும் பேசப்பட்டது.
அடுத்த அவைத் தலைவர் யார்?:
இதற்கிடையே கட்சியின் அவைத் தலைவராக இருந்த மு.கண்ணப்பன் விலகிவிட்டதால் மூத்த தலைவரான மாரியப்பன் அவைத் தலைவராகலாம் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தனக்கு மிக நம்பகமான நாசரேத் துரைக்கு அந்தப் பதவியையை வழங்க வைகோ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications