Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோகமலை-போலீஸ் ஜீப் மோதி விவசாயி பலி

Subscribe to Oneindia Tamil

தோகமலை: கரூர் மாவட்டம், தோகமலை அருகே போலீஸ் ஜூப் மோதி விவசாயி பலியானார்.

கரூர் மாவட்டம், தோகமலை அருகே உள்ளது ஆர்.டி.மலை. இங்குள்ள தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (65) விவசாயி.

இவருக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது. வழக்கம் போல் தோட்டத்து வேலையை முடித்துக் கொண்டு விவசாயி கருப்பண்ணன் வீட்டிற்கு இரவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திருச்சியில் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொணடு கரூர் நோக்கி கரூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தனது ஜீப்பில் திரும்பிக் கொண்டிருந்தார். ஜீப்பை அவரது டிரைவர் தர்மேந்திரன் ஓட்டிவந்தார்.

இரவில் ரோட்டின் ஓரத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி கருப்பண்ணன் மீது போலீஸ் ஜீப் மின்னல் வேகத்தில் மோதியது. இதில் விவசாயி கருப்பண்ணன் படுகாயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தோகமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+