அதிமுகவிடம் 7 தொகுதிகளை கேட்டுள்ளோம்-சிபிஐ
நெல்லை: அதிமுகவிடம் 7 தொகுதிகளை கேட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
நல்லகண்ணு நெல்லை வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக 2 சுற்று பேசியுள்ளோம். 20ம் தேதிக்குப் பிறகு பேச்சுவார்த்தை முடியும்.
தென்காசி, நாகை, திருப்பூர் உள்பட 7 தொகுதிகளைக் கேட்டிருக்கிறோம். இதுதொடர்பாக பேசி வருகிறோம். பேச்சுவார்த்தையில் பிரச்சினை இல்லை, சுமூகமாகவே போய்க் கொண்டிருக்கிறது.
இந்த தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்தும், வேலைவாய்ப்பு இல்லாமை ஆகியவை குறித்து பிரசாரம் செய்வோம். இடதுசாரிகள் எல்லோரும் சேர்ந்து மக்களுக்கு வேண்டுகோள் என்று ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் நமது தமிழர்கள் காங்கிரசுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். மத்தியில் யாரும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்றார் நல்லகண்ணு.