தங்கபாலு எங்கு நின்றாலும் தோற்கடிப்போம் - நாடார் பேரவை
டெல்லி: கள் இறக்குவதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தேர்தலில் எங்கு போட்டியிட்டாலும் அவரை நாடார் சமுதாயத்தினர் தோற்கடிப்பார்கள் என்று தமிழ்நாடு நாடார் பேரவைத தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.
தமிழ் நாட்டில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு நாடார் பேரவையினர் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருந்தனர்.
பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ் நாட்டில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு போராட்டம் நடத்தியது கண்டனத்துக்குரியது.
அரசு மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தாமல், கள் இறக்குவதற்கு எதிராக போராட்டம் நடத்திய அவருக்கு தேர்தலில் எதிர்ப்பு தெரிவிப்போம்.
தங்கபாலு எந்த்த தொகுதியில் நின்றாலும் அவரை நாடார்கள் தோற்கடிப்பார்கள். நாங்களும் அவரது தோல்விக்காக உழைப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications