15 நாளில் 10 லட்சம் நானோ முன்பதிவு - டாடா நம்பிக்கை
இதற்கு முன்பு பியட் யுனோ ரக கார்களுக்குத்தான் அதிக முன்பதிவு நடந்தது. 1995-96 ம் ஆண்டு இந்தக் கார் அறிமுகமானபோது, 15 நாட்களில் 2.90 லட்சம் பியட் கார்கள் விற்பனையானதுதான் அதிகபட்ச முன்பதிவு சாதனையாக இருந்தது.
அந்த சாதனையை நானோ இப்போது முறியடிக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
மேலும் ஒரு நானோ முன்பதிவுக்கு ரூ.70 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் 15 நாட்களில் ரூ.7000 கோடியை டாடா மோட்டார்ஸ் எளிதில் திரட்டிவிடும் என நம்பப்படுகிறது.
இவ்வளவு கார்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், மாதத்துக்கு 3000 நானோ கார்கள் மட்டுமே சப்ளை செய்யப்படும் என டாடா அறிவித்துள்ளது. அதாவது குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்கள் தேர்நெதெடுக்கப்பட்டு கார்களைத் தருவார்களாம்.
அகமதாபாத்துக்கு அருகே அமைந்துள்ள நானோ ஆலை முழுமையாக செயல்படத் துவங்கினால்தான் நிலைமை சீரடையுமாம். இந்த ஆலை ஆண்டுக்கு 250000 கார்களை உற்பத்தி செய்யும். வரும் ஜூன் மாதம் இந்த ஆலை செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
ஆக, இப்போ 'புக்' பண்ணாலும், நானோ கிடைக்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் எனத் தெரிகிறது.
கார் நானோவாக இருந்தாலும் காத்திருப்பு மெகாவாக இருக்கும் போலிருக்கே..