ஐபிஎல் வெளிநாட்டுக்கு மாறினால் ரூ.200 கோடி நஷ்டம்
மும்பை: பணம் கொழிக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்தாமல் ஏதாவது ஒரு வெளிநாட்டில் நடத்தினால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு( பி.சி.சி.ஐ.) ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று ஐபிஎல் தலைவர் லலித் மோடி கூறியுள்ளார்.
ஆனால் இந்த இழப்பு ஒரு பொருட்டல்ல... நம்பகத்தன்மையைக் காக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்கிறார் லலித் மோடி.
பொதுத் தேர்தலுக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளை போட்டிகளை நடத்துங்கள், முழு பாதுகாப்பு தருகிறோம் என இந்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் அறிவித்துள்ளன.
ஆனால் அதுவரை காத்திருக்க முடியாது என்றும் உடனடியாக போட்டிகளை நடத்தியே தீருவோம் என்றும், இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாவிட்டால், தென் ஆப்பிரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது ஐ.பி.எல்.
போட்டிகள் ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து மே 24 ம் தேதி வரை நடக்க இருக்கிறது. பொதுத்தேர்தலும் ஏப்ரல் 16ம் தேதியில் இருந்து மே 13ம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஐ.பி.எல்.லின் 59 போட்டிகளை நடத்த இருக்கும் நாடு எது என்று இன்னும் சில மணி நேரங்களில் அறிவிக்க உள்ளனர்.
ஐ.பி.எல்.லின் தலைவர் லலித் மோடி இது குறித்து பேசியபோது, இதனால் ஏற்படப்போகும் எல்லா நஷ்டங்களையும் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என்றார். இந்த மாற்றங்களால் ரூ.200 கேடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என அறித்துள்ளார்.
ஸ்பான்ஸர்கள் அதிருப்தி!
இந்நிலையில், ஐபிஎல் முடிவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர் போட்டிகளை ஸ்பான்ஸர் செய்யும் விளம்பர நிறுவனங்கள்.
வெளிநாடுகளில் போட்டி நடைபெறுவது உறுதி என்றால் நாங்கள் விலகிக்கொள்கிறோம், வேறு போட்டிகளை ஸ்பான்ஸர் செய்கிறோம் என அறிவித்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட ரூ.600 கோடி இழப்பு ஏற்படும் என அஞ்சுகிறது ஐபிஎல்.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications