For Daily Alerts
Just In
பார்வர்ட் பிளாக் தலைவர் ஆண்டித்தேவர் மரணம்
மதுரை: தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டித்தேவர் மரணமடைந்தார்.
சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த ஆண்டித்தேவர் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 77.
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டித்தேவர் 3 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். பிஸ்வாஸ் பிரிவு பார்வர்ட் பிளாக்கின் தலைவராக இருந்து வந்தார்.
Comments
அரசியல் தமிழ்நாடு தலைவர் மரணம் political leaders tamilnadu passes away forward bloc பார்வர்ட் பிளாக்
Story first published: Monday, March 23, 2009, 13:16 [IST]