பாமக செயற்குழு 26ம் தேதி கூடுகிறது - கூட்டணி குறித்து முடிவு
சென்னை: பரபரப்பான சூழலில் பாமக செயற்குழுக் கூட்டம் வருகிற 26ம் தேதி தைலாபுரத்தில் கூடுகிறது. அன்றைய தினம் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
தேமுதிகவின் நிலை கிட்டத்தட்ட தெளிவாகி விட்டது. இந்த நிலையில் பாமகவின் நிலை குறித்து இன்னும் ஒரு முடிவு தெரியவில்லை.
இந்த நிலையில், இறுதி கட்டமாக டாக்டர் ராமதாஸுடன் இன்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசினார். அப்போது திமுக 6 சீட் தருவதாகவும், எங்களுக்குத் தரப்படும் சீட்களில் இரண்டை உங்களுக்குத் தருவதாகவும், கூட்டணிக்கு வாருங்கள் என்று தங்கபாலு இறுதியாக வேண்டுகோள் வைத்தார்.
இந்த பின்னணியில் பாமகவின் செயற்குழுக் கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ளஅறிக்கையில், பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில், மார்ச் 26ம் தேதி, தைலாபுரம் தோட்டத்தில், பாமக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவி்க்கப்பட்டுள்ளது.
கூட்டணி குறித்து ராமதாஸ் முடிவெடுத்து விட்டதாகவும், அதை அன்றைய தினம் செயற்குழுவில் வைத்து அவர் ஒப்புதல் பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே பாமக யாருடன் சேரும் என்பது 26ம் தேதி தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications