அமெரிக்காவில் விமான விபத்தில் சிக்கி 17 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் மேற்கு மாகாணமான மான்டனாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் சிறார்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த விபத்து நேரிட்டது. இதுகுறித்து பெடரல் விமான நிர்வாக செய்தித் தொடர்பாளர் மைக் பெர்குஸ் கூறுகையில், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜாலி டிரிப் ஆக குழந்தைகள் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நினைக்கிறோம். ஆனால் அது சோகத்தில் முடிந்துள்ளது.
ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம் கலிபோர்னியாவின் ஆரோவில் நகரிலிருந்து கிளம்பி, மான்டனாவின் போஸ்மன் நகருக்கு வந்து கொண்டிருந்தது. தரையிறங்குவதற்கு முன்பு ஹோலி கிராஸ் கல்லறையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
போஸ்மன் நகருக்கு வரும் திட்டத்தை கடைசி நேரத்தில் விமானி மாற்றியிருக்கிறார். போஸ்மனுக்குப் பதிலாக பட் நகருக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார் என்றார்.
விமானம் விழுந்த வேகத்தில் அது தீப்பிடித்து எரிந்தது. விமானம் தலைகுப்புற விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். கல்லறை வளாகத்தில் உள்ள மரங்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.