சந்தை: தொடருது ஒபாமா எஃபெக்ட்!
மும்பை: காளையின் நேற்றைய துள்ளல் பங்குச் சந்தையில் இன்றும் தொடர்கிறது. வர்த்தகம் துவங்கிய சில நொடிகளில் 125 புள்ளிகள் உயர்ந்து 9549 புள்ளிகளில் வர்த்தகம் நடந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டியும் 33 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளதாலும், ஒபாமாவின் புதிய சலுகைகள் காரணமாகவும் இந்த சாதகமான நிலை சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். வங்கிகளை வீழ்ச்சியிலிருந்து காக்க ஒரு டிரில்லியன் டாலர்கள் வரை தர ஒபாமா நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் விளைவு டோவ் ஜோன்ஸில் இன்று 500 புள்ளிகளுக்கும் மேல் குறியீட்டெண்கள் உயர்ந்தன.
ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்துமே நல்ல முன்னேற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடர்கின்றன.
பிற்பகல் 12.30 நிலவரப்படி சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. நிப்டி 66 புள்ளிகள் உயர்ந்திருந்தது.












Click it and Unblock the Notifications