திமுகவுக்கு பெரும் சரிவு-டிஎன்ஏ கருத்துக் கணி்ப்பு
மும்பை: டிஎன்ஏ நாளி்தழ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு பெரும் சரிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே முன்னணியில் உள்ளது என்றாலும் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், 3வது அணிக்கும் தற்போது நிலைமை மேம்பட்டுள்ளதாக டிஎன்ஏ கூறுகிறது.
டி.என்.ஏவின் கடந்த வார கணிப்புப்படி காங்கிரஸுக்கு 149 சீட்களும், பாஜகவுக்கு 134 சீட்களும், மற்றவர்களுக்கு 257 சீட்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வாரத்தில் நடத்தப்பட்ட கணிப்புப்படி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 201 சீட்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 170 சீட்களும், 3வது அணி மற்றும் பிறருக்கு 170 சீட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு உயர்வு...
கடந்த வாரம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி அதிமுகவுக்கு 16 சீட்களும், திமுகவுக்கு 7, பாமகவுக்கு 6, காங்கிரஸுக்கு 4, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியோருக்கு தலா 2 சீட்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார கணக்கில், அதிமுக கூட்டணிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 25 சீட்களும், திமுக கூட்டணிக்கு 15 சீட்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.