தேர்தலுக்கு முன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
சென்னை: பிளஸ் 2 தேர்வு தாள்கள் இந்த ஆண்டு விரைவாக திருத்தப்பட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அறிவக்கப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ம் தேதி ஆரம்பித்த பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்தது. சுமார் ஏழு லட்சம் மாணவ மற்றும் மாணவியர்கள் எழுதிய இத்தேர்வு முடிவை இம்முறை விரைவாக வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இது இருக்கும் என தெரிகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில்,
விடைத்தாள் திருத்தும் பணி வரும் ஏப்ரல் 1 அல்லது 2ம் தேதி தொடங்கும். தமிழ்நாடு முழுவதும் 42 மையங்களில் விடைத்தாள் திருத்தப்படுகிறது. 56 லட்சம் விடைத்தாள்கள் திருத்த வேண்டியுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும்.
விடைத்தாள்கள் 10 நாட்களில் திருத்தி முடிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள விடைத்தாளுக்கு ஏற்ப ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். சென்னையில் 2 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மே 9ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்தாண்டு அதை விட முன்னதாக வெளியிட இருக்கிறோம்.
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிடும் சூழ்நிலை இருக்கும்பட்சத்தில் பிழை இல்லாமலும் வெளியிட வேண்டும் என்பது தேர்வுத்துறை கடமையாகும். எனவே அவற்றை எல்லாம் பார்த்து தான் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றார் வசந்தி ஜீவானந்தம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications