நல்ல முடிவை எடுப்பார் விஜயகாந்த் - தங்கபாலு நம்பிக்கை
சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல முடிவை எடுப்பார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
ராமதாஸை சந்திக்கவில்லை ..
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசினார் தங்கபாலு. அப்போது அவர் கூறுகையில்,
கேள்வி: டாக்டர் ராமதாசை நீங்கள் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே?
பதில்: இல்லை. சந்திக்கவில்லை. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எங்களுக்கு மிக வேண்டியவர். காங்கிரஸ் கட்சி மீது பற்று கொண்டவர். பா.ம.க. தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் நீடிக்கிறது. தோழமைக் கட்சித் தலைவர்களை சந்திப்பது ஒன்றும் புதிது அல்ல. தேவைப்படும் நேரத்தில் சந்திப்போம்.
கேள்வி: டெல்லியில் தே.மு.தி.க. நிர்வாகிகளை சந்தித்தீர்களே?
பதில்: அவர்கள் எங்களுடைய நண்பர்கள். அவர்களை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல.
கேள்வி: விஜயகாந்த், மக்களுடன் தான் கூட்டணி என்று கூறியிருக்கிறார். அவரை காங்கிரஸ் கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி தோல்வியடைந்துவிட்டதா?
பதில்: ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் தான் விரும்புகின்றவற்றை சொல்ல உரிமை உள்ளது. மதச் சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பது சோனியாகாந்தி தலைமையில்தான் முடியும். ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் ஒருங்கிணைந்து வருவார்கள். அதுவரை பொறுத்திருங்கள்.
சோனியா காந்தியின் தலைமையை ஏற்கிறவர்களை ஏற்கிறோம். தேசியம், மதச்சார்பின்மையில் நம்பிக்கையுடையவர்களை வரவேற்பது எங்கள் இயல்பு. இன்றைக்கும் அழைக்கிறோம். அதில் சந்தேகம் இல்லை. விஜயகாந்த் தேசிய தோழர். தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.
சோனியா சொல்வதே வேதம்...
கேள்வி: காங்கிரஸ் கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறதா?
பதில்: காங்கிரஸ் கூட்டணியில் யார் இருப்பார்கள்? என்பதை பற்றி சோனியாகாந்தி முடிவெடுப்பார். அவர் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். அவர் சொல்வதுதான் சட்டம், வேதம்.
கேள்வி: தமிழ்நாட்டில் தொகுதிப்பங்கீடு எந்த அளவுக்கு உள்ளது?
பதில்: தொகுதிப் பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. பீகார் வேறு, தமிழகம் வேறு. தமிழகத்தில் கூட்டணி பலமாக உள்ளது என்றார் தங்கபாலு.
தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர காங்கிரஸ் தொடர்ந்து முயன்று வருவதையே தங்கபாலுவின் பேச்சு காட்டுகிறது.
முன்னதாக, இலங்கை தமிழர்களுக்காக காஞ்சீபுரம், தேனி, விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 2 லாரிகளில் நிவாரண பொருட்கள் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
இந்த பொருட்களை காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள், தேனி மாவட்ட பொறுப்பாளர்கள், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலுவிடம் நேரில் வழங்கினர்.
-
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது












Click it and Unblock the Notifications